செய்திகள்
கைது

போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல்- வக்கீல் உள்பட 2 பேர் கைது

Published On 2021-11-16 10:34 GMT   |   Update On 2021-11-16 10:34 GMT
சீர்காழி அருகே போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

சீர்காழி அடுத்த பெரம்பூர் சென்னியநல்லூர் பெரியதெருவை சேர்ந்தவர் அன்புமணன்(வயது 31). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார். அன்புமணன் சீர்காழி கரிக்குளம் பகுதி வழியாக தனியார் பஸ் இயக்கி சென்றார். அப்போது எதிரே புதுத்துறை பகுதியை சேர்ந்த வழக்குரைஞர் ராஜேஷ், சிவா, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ராஜா ஆகியோர் சென்ற காரின் மீது பஸ் மோதி, கார் சைடு கண்ணாடியை உடைத்துவிட்டு பஸ் புதிய பேருந்துநிலையம் சென்றுவிட்டதாம்.

அங்கிருந்து பஸ் வெளியே வரும்போது காரில் வந்தவர்கள் பஸ்சை தடுத்துநிறுத்தி டிரைவரை கடுமையாக திட்டியதோடு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்த பேருந்து ஓட்டுனரை காவல்நிலையத்திலேயே ராஜேஷ் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அன்புமணன் அளித்த புகாரின் பேரில் வழக்குரைஞர் ராஜேஷ், சிவா, ராஜா ஆகியோர் மீது சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து வக்கீல் ராஜேஷ், சிவா ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜாவை தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங் சீர்காழி காவல்நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News