செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற வாலிபர்கள் கைது

Published On 2021-11-16 14:44 IST   |   Update On 2021-11-16 14:44:00 IST
புகையிலைப் பொருட் களை காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியில் வடக்கு போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரித்த போது நல்லூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் (35) என்பதும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. புகையிலைப் பொருட்களை காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காலேஜ் ரோட்டில் உள்ள கடையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 45 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் சிலம்பரசனுக்கு உதவியாக இருந்த முகமது ரியாஸ் (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News