செய்திகள்
உயிரிழப்பு

தேவகோட்டையில் ‘மர்ம’ காய்ச்சலுக்கு கர்ப்பிணி உயிரிழப்பு

Published On 2021-11-15 09:04 GMT   |   Update On 2021-11-15 09:04 GMT
கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுசந்தை அருகே வசிப்பவர் முருகேசன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது28).

வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இங்கு பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு சர்மிளா (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 4 மாத கர்ப்பிணியான அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சர்மிளாவுக்கு ‘மர்ம’ காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்தபோதும் சர்மிளா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.

ராம்நகரைச் சேர்ந்த வினோத் (42), பெரிய காரை வசந்த் (22) மற்றும் ஒருவர் என மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தேவகோட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News