செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார் நேதாஜி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற வீராசாமி (வயது 56) என்பவரை கைது செய்தனர். அதே போல ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற சஜ்ஜலப்பட்டி செல்வமணி (47) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.