செய்திகள்
நகை (கோப்புப்படம்)

நகைக்கடன் தள்ளுபடி- கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையை வட்டியுடன் வழங்க முடிவு

Published On 2021-11-11 05:32 GMT   |   Update On 2021-11-11 09:43 GMT
நவம்பர் 1-ந்தேதி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த கடன் தொகையை வட்டியுடன் கணக்கிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க ஏதுவாக தற்போது கூட்டுறவு சங்கங்களிடம் அரசு விவரம் சேகரித்து வருகிறது.

இதற்காக அரசாணை வெளியிட்டு நவம்பர் 1-ந்தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

தள்ளுபடி செய்த நகைக்கடன் தொகை தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்த தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அந்த தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க ஏதுவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News