செய்திகள்
ரேசன் அரிசி

பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 75 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-11-10 18:07 GMT   |   Update On 2021-11-10 18:07 GMT
பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் மணல் பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சின்னசாமி (வயது 37) என்பவருடைய வீட்டில் மொத்தம் 2,250 கிலோ எடை கொண்ட 75 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையில் கோழிப்பண்ணை மற்றும் டிபன் கடைகளுக்கு வழங்குவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து சின்னசாமியை கைது செய்தனர்.

இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எப்படி அவருக்கு கிடைத்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News