செய்திகள்
தற்கொலை

மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-11-10 11:24 GMT   |   Update On 2021-11-10 11:24 GMT
மகளின் புனித நீராட்டு விழாவில் மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 31). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் ஏராளமானோர் வீட்டிற்கு வந்து இருந்தனர். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த செல்லமுத்து மது போதையில் வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

உறவினர் மத்தியில் தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதால் செல்லமுத்து மிகுந்த மனவேதனை அடைந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்லமுத்துவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News