செய்திகள்
பலத்த மழையால் தமிழ்நாடு முழுவதும் 3691 ஏரிகள் நிரம்பின
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 2,040 நீர்பாசன குளங்கள் உள்ளது. இதில் 840 நீர் தேக்கங்களில் 75 சதவீத தண்ணீர் இருக்கிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 28-ந் தேதி தொடங்க வேண்டிய பருவமழை முன்னதாகவே தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த 1-ந் தேதியில் இருந்து மாநிலத்தில் சுமார் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர் பாசனத்துக்கான ஏரிகள் நிரம்பி வருகின்றன.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளன. மாநிலத்தில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இதில் 3,691 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதாவது மொத்த பாசனத்தில் 26 சதவீத ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 555 குளங்கள் நிரம்பின. அதற்கடுத்தபடியாக தென்காசியில் 333, தஞ்சாவூரில் 306, கன்னியாகுமரியில் 287, திருவண்ணாமலையில் 258 குளங்கள், ஏரிகள் நிரம்பின. கடந்த ஆண்டு இதே நாளில் 629 ஏரிகள் மட்டுமே நிரம்பி இருந்தன.
மேலும் 2,964 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளது. 2,498 குளங்களில் 51 முதல் 75 சதவீதம் வரையிலும், 2,505 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையிலும், 2,066 குளங்களில் 1 முதல் 25 சதவீதம் வரையும் தண்ணீர் இருப்பு உள்ளது. 414 குளங்களில் நீர் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 2,040 நீர்பாசன குளங்கள் உள்ளது. இதில் 840 நீர் தேக்கங்களில் 75 சதவீத தண்ணீர் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கையில் 1,460 குளங்கள் உள்ளது. இதில் 75 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 215 குளங்களில் 76 முதல் 99 சதவீதம் நீர் உள்ளது.
மதுரையில் 332 குளங்களில் 76 முதல் 99 சதவீத நீர் இருப்பு இருக்கிறது. 158 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 295 குளங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கு கீழும் தண்ணீர் இருப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 28-ந் தேதி தொடங்க வேண்டிய பருவமழை முன்னதாகவே தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த 1-ந் தேதியில் இருந்து மாநிலத்தில் சுமார் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர் பாசனத்துக்கான ஏரிகள் நிரம்பி வருகின்றன.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளன. மாநிலத்தில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இதில் 3,691 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதாவது மொத்த பாசனத்தில் 26 சதவீத ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 555 குளங்கள் நிரம்பின. அதற்கடுத்தபடியாக தென்காசியில் 333, தஞ்சாவூரில் 306, கன்னியாகுமரியில் 287, திருவண்ணாமலையில் 258 குளங்கள், ஏரிகள் நிரம்பின. கடந்த ஆண்டு இதே நாளில் 629 ஏரிகள் மட்டுமே நிரம்பி இருந்தன.
மேலும் 2,964 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளது. 2,498 குளங்களில் 51 முதல் 75 சதவீதம் வரையிலும், 2,505 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையிலும், 2,066 குளங்களில் 1 முதல் 25 சதவீதம் வரையும் தண்ணீர் இருப்பு உள்ளது. 414 குளங்களில் நீர் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 2,040 நீர்பாசன குளங்கள் உள்ளது. இதில் 840 நீர் தேக்கங்களில் 75 சதவீத தண்ணீர் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கையில் 1,460 குளங்கள் உள்ளது. இதில் 75 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 215 குளங்களில் 76 முதல் 99 சதவீதம் நீர் உள்ளது.
மதுரையில் 332 குளங்களில் 76 முதல் 99 சதவீத நீர் இருப்பு இருக்கிறது. 158 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 295 குளங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கு கீழும் தண்ணீர் இருப்பு உள்ளது.