செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 100 கனஅடியாக குறைந்தது

Published On 2021-11-09 09:12 GMT   |   Update On 2021-11-09 09:12 GMT
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
பூந்தமல்லி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியில் 20.99 அடிக்கு தண்ணீர் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துக்கொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்தப்பட்டது.

செம்பரபாக்கம் ஏரிக்கு நேற்று நீர்வரத்து 710 கனஅடியாக இருந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 100 கன அடியாக குறைந்தது. எனினும் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

காலை நிலவரப்படி ஏரியில் 2,852 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது (மொத்த கொள்ளவு 3,645 மி.கன அடி).

Tags:    

Similar News