செய்திகள்
உடுமலை அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது
ராவணாபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடுமலை:
உடுமலை அருகே ராவணாபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்திய ராவணாபுரத்தைச் சேர்ந்த ராஜூ(வயது60), தேவனூர்புதூர் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(21), நெகமம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சேவல்கள் மற்றும் ரூ.350 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.