செய்திகள்
கைது

கோவையில் டிரைவருக்கு கத்தி குத்து - நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2021-11-06 10:45 GMT   |   Update On 2021-11-06 10:45 GMT
கோவையில் டிரைவரை கத்தியால் குத்திய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை விளாங்குறிச்சி ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 48). டிரைவர். இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த அனில்குமார் (40), ராஜா மணி (24) மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனீஸ்.

சம்பவத்தன்று இரவு முனீஸ், ராஜசேகரிடம் அவரது வீட்டில் தங்கிக் கொண்டு காலை புறப்பட்டு செல்வதாக கூறினார். அதற்கு ராஜசேகர் மறுத்தார். இதனால் முனீஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முனீஸ் மறுநாள் காலை அணில்குமார் மற்றும் ராஜாமணியை அழைத்துக் கொண்டு ராஜசேகர் வீட்டிற்கு வந்தார். அங்கு 3 பேரும் சேர்ந்து ராஜசேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் ராஜசேகரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர். அப்போது ராஜாமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை குத்தினார்.

பின்னர் அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜசேகர் சத்தம் போட் டார். அவரின் சதத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்த ராஜசேகர் கோவில்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அணில்குமார் மற்றும் ராஜாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய முனீஸ்சை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News