செய்திகள்
கோப்புப்படம்

சிதம்பரம், திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

Published On 2021-11-03 05:18 GMT   |   Update On 2021-11-03 05:18 GMT
சிதம்பரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

நாகையில் இருந்து திருபதிநோக்கி அரசு விரைவு பஸ் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ் சிதம்பரம் அருகே பெரியகுமட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் திடீரென பஸ்சின் முன்பகுதியில் கற்களை சரமாரியாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பரங்கிபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன்பஸ் ஒன்று ஆனத்தூர் வழியாக சிறுகிராமத்துக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் அருண் ஓட்டினார்.

சே.மங்களம்-ஆனத்தூர் மலட்டாறு வாய்க்கால் பாலத்தில் சென்றபோது மர்மநபர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து பஸ்சின் டிரைவர் அருண் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News