செய்திகள்
தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-11-02 08:59 GMT   |   Update On 2021-11-02 08:59 GMT
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா பாலதொட்டனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). விவசாயி. இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் மது போதையில் அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆனந்த் ஊருக்கு வெளியே உள்ள மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News