செய்திகள்
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை (வயது 65), விவசாயி. இவரது மகன் முனுசாமி (43). சென்னையில் மளிகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிறுநாத்தூர் சிவம் நகரில் முனுசாமி வீடு கட்டியுள்ளார். விசேஷ நாட்களில் குடும்பத்துடன் முனுசாமி தனது வீட்டிற்கு வந்து செல்வாராம். நேற்று காலையில் முனுசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகை - பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.