செய்திகள்
விருத்தாசலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
விருத்தாசலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஆஸ்பத்திரி சாலை பகுதியில் வசிப்பவர் ஞான சுப்பிரமணியன் (வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளை விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நிறுத்திவிட்டு, அங்குள்ள இ-சேவை மையத்துக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர் திருடி சென்றுவிட்டார்.
இதேபோல், ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (37), இவர் விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடை அருகே நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக இருவரும் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.