செய்திகள்
கைது

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது

Published On 2021-10-24 09:56 GMT   |   Update On 2021-10-24 09:56 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி போலீசார் அங்குள்ள விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான 942 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த ராஜபாளையம் மாங்குடியைச் சேர்ந்த சாமுவேல் (46), டி.பி.மில் ரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

இதே போல் சிவகாசி, மயிலாடுதுறை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் திருப்பதி (43), ஞானப்பழம் ஆகியோர் புகையிலை பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1,500 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் ரூ1,560 மதிப்பிலான புகையிலை பொருட்களுடன் முருகன் (47) கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News