செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகரில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

Published On 2021-10-21 06:56 GMT   |   Update On 2021-10-21 06:56 GMT
விருதுநகரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 17-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று வரும்போது அந்த பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் முனியராஜ் பேச்சு கொடுத்துள்ளார்.

அவ்வப்போது அவர் சிறுமியிடம் 2-வது திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி உள்ளார். சிறுமியும் நம்பினார். இதனை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் சந்தேகப்பட்டனர். இதுபற்றி அவரிடம் கேட்டுள்ளனர்.

அப்போதுதான் முனியராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததும், அதன் காரணமாக சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.

இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி முனியராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News