செய்திகள்
கைது

சீர்காழியில் குடோனில் புகையிலை பொருள் பதுக்கி வைத்தவர் கைது

Published On 2021-10-16 16:26 GMT   |   Update On 2021-10-16 16:26 GMT
சீர்காழியில் குடோனில் புகையிலை பொருள் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிறப்பு தனிப்படை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் சீர்காழி பகுதியில் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது திருக்கோலக்கா பகுதியில் குடோனில் ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற புகையிலை குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரூ.3லட்சம் மதிப்புடைய 9 ஆயிரத்து 174 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்த கோபால் மகன் கஜேந்திரன் ( வயது 52) என்பவரை கைது செய்ததோடு பறிமுதல் செய்த குட்கா பொருட்களை சீர்காழி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய திருக்கோலக்கா பகுதியை வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News