செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன். இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்க்கும் போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.