செய்திகள்
திருவண்ணாமலை அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை
திருவண்ணாமலை அருகே மதுபோதையில் அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஷைலா (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
முருகன் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஷைலா படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு 12.15 மணி அளவில் எழுந்த முருகன் அம்மிக்கல்லை எடுத்து வந்து ஷைலா தலையில் போட்டு அவரை கொலை செய்தார்.
இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியவந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் முருகனை கைது செய்தனர்.
மேலும் ஷைலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆலத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஷைலா (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
முருகன் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஷைலா படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு 12.15 மணி அளவில் எழுந்த முருகன் அம்மிக்கல்லை எடுத்து வந்து ஷைலா தலையில் போட்டு அவரை கொலை செய்தார்.
இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியவந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் முருகனை கைது செய்தனர்.
மேலும் ஷைலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆலத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.