செய்திகள்
அனுமதியின்றி காப்பகம்- அரசு பள்ளி ஆசிரியைக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்
புதுக்கோட்டை அருகே எவ்வித அனுமதியின்றி காப்பகம் நடத்தியது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை கலைமகள் தனது கணவர் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து எவ்வித அனுமதியும் பெறாமல் குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார். அதன் மூலம் வெளிநாடுகளில் சுய ஆதாயத்திற்காக நிதியும் திரட்டியுள்ளார்.
இந்த நிலையில் அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தை குழந்தைகள் நல அலுவலர் குணசீலி தலைமையில் ஏற்கனவே மூடப்பட்டது. ஆனால் விதிகளை மீறி காப்பகத்தை மறுபடியும் அனுமதி பெறாமல் திறந்து நடத்தியதும், குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததோடு, அவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தியதும் தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் குழந்தைகள் காப்பகம் மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே அரசு பள்ளியில் கலைமகள் ஆசிரியராக பணியாற்றி வந்த காரணத்தினால் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி ஆசிரியை கலைமகளுக்கு அரசு அனுமதியின்றியும், அரசு ஊழியர்கள் செயல்பாட்டை மீறிய குற்றத்திற்காகவும் அரசு பணியாளர் நன்னடைத்தை விதி 17(பி) குற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதற்கு அவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும். இருந்தபோதிலும் தற்போது அன்னவாசல் போலீசார் கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை போலீசார் கைது செய்யும் பட்சத்தில் கலைமகள் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை கலைமகள் தனது கணவர் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து எவ்வித அனுமதியும் பெறாமல் குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார். அதன் மூலம் வெளிநாடுகளில் சுய ஆதாயத்திற்காக நிதியும் திரட்டியுள்ளார்.
இந்த நிலையில் அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தை குழந்தைகள் நல அலுவலர் குணசீலி தலைமையில் ஏற்கனவே மூடப்பட்டது. ஆனால் விதிகளை மீறி காப்பகத்தை மறுபடியும் அனுமதி பெறாமல் திறந்து நடத்தியதும், குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததோடு, அவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தியதும் தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் குழந்தைகள் காப்பகம் மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே அரசு பள்ளியில் கலைமகள் ஆசிரியராக பணியாற்றி வந்த காரணத்தினால் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி ஆசிரியை கலைமகளுக்கு அரசு அனுமதியின்றியும், அரசு ஊழியர்கள் செயல்பாட்டை மீறிய குற்றத்திற்காகவும் அரசு பணியாளர் நன்னடைத்தை விதி 17(பி) குற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதற்கு அவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும். இருந்தபோதிலும் தற்போது அன்னவாசல் போலீசார் கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை போலீசார் கைது செய்யும் பட்சத்தில் கலைமகள் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.