செய்திகள்
மரணம்

போளூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் மரணம்

Published On 2021-10-05 11:17 GMT   |   Update On 2021-10-05 11:17 GMT
போளூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
போளூர்:

போளூர் அடுத்த பெலசூர் என்ற கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் துரைமுருகன் (வயது 31) கார் டிரைவர். இவர் கடந்த 1ம் தேதி காலை வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் ஏறி முருங்கக்காய் பறித்த போது தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News