செய்திகள்
வழக்கு பதிவு

கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு

Published On 2021-10-05 13:08 IST   |   Update On 2021-10-05 13:08:00 IST
ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே திடீர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 123 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாக 1,926 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 1,626 வழக்குகள் உள்பட கடந்த மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 786 வழக்குகளை ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பதிவு செய்தனர். இதன் மூலம் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Similar News