செய்திகள்
கோப்புபடம்

குன்னம் அருகே தாய் திட்டியதால் மாணவி தற்கொலை

Published On 2021-10-02 19:31 IST   |   Update On 2021-10-02 19:31:00 IST
குன்னம் அருகே தாய் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி. இவரது மகள் தர்ஷினி (வயது 15). இவர் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷினி வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாய் சித்ரா, தர்ஷினியை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த எலி பசையை(விஷம்) தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News