செய்திகள்
கொள்ளை

திருவண்ணாமலை அருகே வீட்டு திண்ணையில் தூங்கிய தாய்-மகளிடம் நகை பறித்த கொள்ளையன்

Published On 2021-10-01 11:50 GMT   |   Update On 2021-10-01 11:50 GMT
திருவண்ணாமலை அருகே வீட்டு திண்ணையில் தூங்கிய தாய்-மகளிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 58) இவரது மகள் கஸ்தூரி (40) இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் இரவு தங்கள் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி உள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் தாய் மற்றும் மகள் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்றுதப்பி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் ஏ.எஸ்.பி.கிரண்ஸ்ருதி, தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் சிறிய தூரம் ஓடி நின்றுவிட்டது. இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது உள்ளூர் நபரா? வெளியூர் நபரா ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் மற்றும் மகளிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் ஆனந்தல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News