செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலை அருகே விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 9 பேர் கைது

Published On 2021-09-27 12:08 GMT   |   Update On 2021-09-27 12:08 GMT
திருவண்ணாமலை அருகே விபசாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை டவுன், கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திருவண்ணாமலை நகரத்தில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, விபசாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து புரோக்கர்கள் 3 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News