செய்திகள்
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது - தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடப்பன் வயல் இறைவன் நகர் பகுதியில் ஒரு இடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கண்டனர். அவர்களில் 2 பேரை போலீசார் பிடித்த நிலையில் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அடப்பன்வயலை சேர்ந்த குமார் (வயது 25), ராஜகோபால் (24) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, மிளகாய் பொடி, கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.