செய்திகள்
திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

Published On 2021-09-25 10:17 GMT   |   Update On 2021-09-25 10:17 GMT
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள சிறுகடவாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 32). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அன்று இரவு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மீமிசல் போலீசில் குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News