செய்திகள்
சூளகிரி அருகே மூதாட்டியிடம் நகை திருட்டு
சூளகிரி அருகே மூதாட்டியிடம் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி அருகே உள்ள கிருஷ்ணகவுனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 34), விவசாயி. சம்பவத்தன்று இவரது தாயார் வெங்கட்டமா (75) என்பவர் வேம்பள்ளி அணை அருகே ஆடுகளை மேய்க்க சென்றார். அந்த பகுதியில் அவர் ஆடுகளை மேய விட்டு விட்டு தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வெங்கட்டமா பையில் வைத்திருந்த ¼ பவுன் தங்க நகையை திருடிச்சென்று விட்டார். இது குறித்து ரங்கசாமி சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.