செய்திகள்
கைது

ஆவூர் அருகே மது விற்றவர் கைது

Published On 2021-09-24 14:51 IST   |   Update On 2021-09-24 14:51:00 IST
ஆவூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதே தடுக்கவும், டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நேற்று மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் மாத்தூர், ஆவூர், பேராம்பூர் ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பேராம்பூரில் சாத்திவயல் ரோட்டில் உள்ள குளக்கரையில் மறைவான இடத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த நாகராஜ் மகன் காளிமுத்து (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News