செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2021-09-24 09:04 GMT   |   Update On 2021-09-24 09:04 GMT
கொரோனாவுக்கு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதற்கிடையே நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 29 பேர் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 42 ஆயிரத்து 25 பேர் குணம் அடைந்தனர். தற்போது 271 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 335 ஆக உள்ளது.
Tags:    

Similar News