செய்திகள்
பாகலூர் அருகே மின்சார மோட்டாரில் வயர் திருட்டு
பாகலூர் அருகே மின்சார மோட்டாரில் வயர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பாகலூர் அருகே உள்ள ஜி.மங்கலத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் (வயது 59). விவசாயி. சம்பவத்தன்று கனிமங்கலத்தில் இவரது நிலத்திற்கு அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதியில் இருந்த மின்சார மோட்டார் கேபிள் வயர் 60 மீட்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து வஜ்ஜிரவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.