செய்திகள்
கைது

கீழ்வேளூர் அருகே டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

Published On 2021-09-20 09:47 GMT   |   Update On 2021-09-20 09:47 GMT
கீழ்வேளூர் அருகே டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது40).டிரைவர். இவர் சம்பவத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு ஆற்று பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் இங்கர்சால் (வயது 26), ஸ்டாலினை வழிமறுத்து கையில் வைத்திருந்த அரிவாளை அவரது கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு இங்கர்சாலை கைது செய்தனர். இவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News