செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் பேலாளம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் ராஜேஷ் (வயது32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.