செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே பெண் தற்கொலை

Published On 2021-09-19 14:31 GMT   |   Update On 2021-09-19 14:31 GMT
ஓசூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மாதேவி (வயது 36) . இவர்கள் ஓசூரில் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வந்தனர். பெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த மாதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News