செய்திகள்
தி.மு.க. கூட்டணிக்கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-19 09:02 GMT   |   Update On 2021-09-19 09:02 GMT
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
பல்லடம்:
 
பல்லடத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தி.மு.க. பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார்.

இதில் நாளை 20-ந்தேதி (திங்கட்கிழமை) 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், விலையை கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வது, கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களது வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News