செய்திகள்
தேனி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பூதிப்புரம், போடேந்திரபுரம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி பிரிவில் மதுவிற்ற பூதிப்புரத்தை சேர்ந்த சங்கர் (வயது 46), போடேந்திரபுரத்தில் மதுவிற்ற அதே ஊரை சேர்ந்த மாசிலாமணி (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.