செய்திகள்
கோப்புபடம்.

போக்குவரத்து நெரிசலை தீர்க்க உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்பு வாகனங்களை நிறுத்த ஏற்பாடு

Published On 2021-09-18 08:49 GMT   |   Update On 2021-09-18 08:49 GMT
வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்தூர் சாலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (ஆர்.டி.ஓ.)அலுவலகம்  செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறவும், புதுப்பிக்கவும், எப்.சி., சான்றிதழ் பெறவும் தினசரி ஏராளமான வாகனங்கள் வருகின்றன. 

மேலும் கனரக வாகனங்களும் அதிகளவில் வருகின்றன. இந்த வாகனங்கள்  எலையமுத்தூர் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்  வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் வாகனங்கள்
நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் எலையமுத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன. 
Tags:    

Similar News