செய்திகள்
ஜி.கே.வாசன்

த.மா.கா. சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்- ஜி.கே.வாசன்

Published On 2021-09-18 04:16 GMT   |   Update On 2021-09-18 04:16 GMT
வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு த.மா.கா சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு த.மா.கா சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடியல் சேகர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, தென்காசி மாவட்டத்திற்கு கே.எஸ்.கே.ராஜேந்திரன் மற்றும் ஐ.சிலுவை நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News