செய்திகள்
விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த் அறிவிப்பு

Published On 2021-09-15 06:46 GMT   |   Update On 2021-09-15 07:40 GMT
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
சென்னை:

9 மாவட்டங்களுக்கான  ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.



இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்.

* போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

* மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு  ரூ.4000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000 செலுத்தி மனு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள்...உள்ளாட்சி தேர்தல்- பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 9 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

Tags:    

Similar News