செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை பவானிசாகர் அணைக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது.
இதனால் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை பவானிசாகர் அணைக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 37 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
அணையின் நீர் மட்டம் 102 அடியாக இருந்தது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு 496 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 1504 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது.
இதனால் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை பவானிசாகர் அணைக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 37 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
அணையின் நீர் மட்டம் 102 அடியாக இருந்தது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு 496 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 1504 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.