செய்திகள்
போராட்டம்

கந்தர்வக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-08 16:58 IST   |   Update On 2021-09-08 16:58:00 IST
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் 9,000 வழங்க வேண்டும், ஒட்டுமொத்த பணப்பலன் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News