செய்திகள்
வெங்கையா நாயுடு

ஒரு வார பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை

Published On 2021-09-08 07:32 IST   |   Update On 2021-09-08 07:32:00 IST
உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார காலம் சென்னையில் தங்கி இருந்து 13-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்.
ஆலந்தூர்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கவர்னர் மாளிகை செயலாளர் ஆனந்த் ராவ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அவரது காரில் அடையாறில் உள்ள வீட்டிற்கு சென்றார். உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார காலம் சென்னையில் தங்கி இருந்து 13-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்.

Similar News