செய்திகள்
கைது

மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்- கிளீனர் கைது

Published On 2021-09-06 10:43 GMT   |   Update On 2021-09-06 10:43 GMT
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கிளீனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி. இவர் கடந்த மாதம் 30-ந்தேதி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்கவில்லை.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் மாணவிக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மேல்பட்டியை சேர்ந்த ஆம்னி பஸ் கிளீனர் கவுதம் (21) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ் புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் செல்போனில் பேசி வந்தனர். மேலும் கவுதம் பெங்களூருக்கு மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கவுதம் மற்றும் மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கவுதம் கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர். பின்னர் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Tags:    

Similar News