செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

Published On 2021-09-05 09:10 GMT   |   Update On 2021-09-05 09:10 GMT
வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் தாமரைப்புலம், கள்ளிமேடு பகுதிகளில் ரோந்து சென்ற அப்போது தாமரைப்புலத்தில் செல்லபாண்டியன் (வயது 58) என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். அதேபோல் கள்ளிமேடு கிராமத்தில் ஆங்காங்கே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே ஊரை சேர்ந்த சம்பத்குமார் (49), செந்தில்குமார் (48), முருகானந்தம் (46) உட்பட 4 பேரை பிடித்து அவர்களிடம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து ரூ.290-யை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News