செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் குடும்ப பிரச்சனையில் தந்தையை தாக்கிய மகன் கைது

Published On 2021-09-05 09:05 GMT   |   Update On 2021-09-05 09:05 GMT
வேதாரண்யத்தில் குடும்ப பிரச்சனையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 72). அவரது மகன் மகேந்திரன் (37). விவசாய கூலி தொழிலாளிகள். இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் எனக்கூறப்படுகிறது.

சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக வீரப்பனுக்கும், மகன் மகேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் வீரப்பனை மரச் சட்டத்தால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த வீரப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News