செய்திகள்
வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் வீரசெல்வம் (வயது19). இவர் அதே ஊரில் உள்ள ஒலி-ஒளி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கருப்பம்புலம் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் வீரசெல்வம் ஈடுபட்டு கொண்டிருந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வீரசெல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.