செய்திகள்
கொள்ளை

காரைக்குடியில் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2021-09-03 16:28 IST   |   Update On 2021-09-03 16:28:00 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அருகே உதயம் நகரில் வசித்து வருபவர் துரைராஜ். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 31-ந்தேதி துரைராஜூக்கு உடல்நிலை சரியில்லாமல் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். துரைராஜின் மகன் முத்துக்குமார் தனியார் வங்கியில் இருந்து 2.25 லட்சம் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு பாண்டிச்சேரி சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் பெட்டகத்தில் வைத்து இருந்த 40 சவரன் நகை 2.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

காலை வீட்டிற்கு வந்த முத்துக்குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பள்ளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News