செய்திகள்
வேதாரண்யம் அருகே மதுபாட்டில் கடத்தியவர் கைது
வேதாரண்யம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில்களை கடத்தியவரை கைது செய்தனர். மேலும் 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை ராமர் பாதம் அருகே நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மது பாட்டில்களை கோடியக்காட்டுக்குச் சென்று அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்ற கோடியக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் கடத்தி வந்த மது பாட்டில்களையும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை ராமர் பாதம் அருகே நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மது பாட்டில்களை கோடியக்காட்டுக்குச் சென்று அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்ற கோடியக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் கடத்தி வந்த மது பாட்டில்களையும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.