செய்திகள்
தற்கொலை

திருமயம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

Published On 2021-08-26 03:30 IST   |   Update On 2021-08-26 03:30:00 IST
திருமயம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

திருமயம் அருகே உள்ள மலையலிங்க புரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 32). லாரி டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், விராச்சிலை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் நடராஜன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News